கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்த தீயணைப்புத்துறை அலுவலர்.. ஈரோட்டில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சாக்கடையில் வீழ்ந்த தீயணைப்புத்துறை அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வருபவர் சக்திவேல் . அவர் அதிகாலை, சக்திவேல் வீட்டிலிருந்து பணிக்காக தீயணைப்பு நிலையத்திற்கு  தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மயக்கம் வருவதை போல உணர்ந்தவர் சாலையின் ஒரம் வண்டியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்துள்ளார். இருசக்கர வாகனத்துடன் அருகில் இருந்த சாக்கடையில் வீழ்ந்துள்ளார். அதனை கண்ட வாகன ஓட்டிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனகே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபடிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire department officer Death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->