மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டம் சாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சாந்தாராம் போபி(வயது 60). இவர் காலையில் எருமை மாடுகளை ஓட்டிக்கொண்டு வயலுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து எருமை மாடு மற்றும் சாந்தாராம் மீது விழுந்து உள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சாந்தாராம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் அவருடைய மூன்று எருமை மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுயடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சாந்தாராம்மின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer killed by electricity in thane


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->