கடன் சுமையால் விஷம் அருந்தி குடும்பமே காலி...! 7பேர் தற்கொலை...! - Seithipunal
Seithipunal


அரியானா பஞ்சகுலாவில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தங்கள் காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதில் பஞ்சகுலாவின் செக்டார் 27 இல் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில், உடல்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிTHTHANAR. இதைத்தொடர்ந்து, காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதில் இறந்தவர்கள் டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல் (42), அவரது பெற்றோர், மனைவி, 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் என அடையாளம் காணப்பட்டனர்.மேலும், பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் அனைவரும் டேராடூனில் கலந்து கொண்டனர் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்து டேராடூனுக்குத் திரும்பும் வழியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.அதுமட்டுமின்றி, சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர்.

இந்த தற்கொலைக்கு முதன்மையான காரணம் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை என்று காவலர்  வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும் இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Family emptied after consuming poison due to debt 7 people commit suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->