உத்தர பிரதேசம் :: 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 9.31 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உத்திரபிரதேசத்தின் தலைநகர் லக்னோ மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் 5.2 ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 82 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake of magnitude 3 point 2 hits Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->