மணிப்பூரில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. பொதுமக்கள் அச்சம்.!
Earthquake in Manipur 3.2 rictor measurement
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும், நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
English Summary
Earthquake in Manipur 3.2 rictor measurement