உத்தர்காசியில் 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் திடீரென 3.1 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது தரையில் இருந்து 5 கிலோமீட்டர் ஆழத்திலும், உத்தர்காசியில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கம் குறைந்த அளவிலேயே இருந்ததால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி உத்தரகாண்ட் உத்தர்காசியிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 17 கிலோமீட்டர் தொலைவிலும், 5 கிலோமீட்டர் ஆழத்தில், 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake hits Uttarkashi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->