இமாச்சலப் பிரதேசத்தில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் நேற்று இரவு 10.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் 5 கிலோமீட்டர் (31.931 டிகிரி வடக்கு மற்றும் 78.638 டிகிரி கிழக்கு) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சில வினாடிகள் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லா என்று பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்தில் இரவு மண்டிக்கு வட-வடமேற்காக 27 கி.மீ தொலைவில் 4.1 ரிட்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake hits Himachal Pradesh Kinnaur district


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->