கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அடுத்த பாதிப்பை சந்தித்த இந்திய மக்கள்.!!
earth quake in kashmir
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலநடுக்கமானது, இந்தியாவிலும் தற்போது தலைதூக்க துவங்கியுள்ளது. டெக்டானிக் பிளேட்டுகள் என்று அறியப்படும் நிலநடுத்தட்டு நகர்ந்து மோதிக்கொள்ளும் விளைவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் வடமேற்கு பகுதியில் 122 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. குஜராத்தில் உள்ளூர் நேரப்படி 8.13 க்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் காத்ரா பகுதியின் கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்ரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.