கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அடுத்த பாதிப்பை சந்தித்த இந்திய மக்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலநடுக்கமானது, இந்தியாவிலும் தற்போது தலைதூக்க துவங்கியுள்ளது. டெக்டானிக் பிளேட்டுகள் என்று அறியப்படும் நிலநடுத்தட்டு நகர்ந்து மோதிக்கொள்ளும் விளைவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. 

நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் வடமேற்கு பகுதியில் 122 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. குஜராத்தில் உள்ளூர் நேரப்படி 8.13 க்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் காத்ரா பகுதியின் கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்ரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earth quake in kashmir


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->