அசாமில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தல்..5 பேர் கைது! - Seithipunal
Seithipunal


அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள 40,000 யாபா மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போதை மாத்திரைகளை கடத்தி வந்த 5 பேரையும் கைது செய்தனர்.

 நாடு முழுவதும் போதைப் பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் சொல்கிறது. போலீசார் பல இடங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தி கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். சமீப காலமாக விமான நிலையம் ,ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவைகளில் போலீசார் சோதனை நடத்தி போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார். இருந்தபோதிலும் போதைப் பொருள் கடத்தல் கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்து உள்ளது செய்திகளில் பார்க்கமுடிகிறது. 

இந்தநிலையில் அசாமின் ஸ்ரீபூமி மாவட்ட போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வெட்டர்பாண்ட் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான 5 பேரிடம் போலீசார் சோதனை செய்தனர்.இந்த சோதனையில் அவர்களிடமிருந்து ரூ. 6.5 கோடி மதிப்புள்ள 40,000 யாபா மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு  போதை மாத்திரைகளை கடத்தி வந்த 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாருக்காக கொண்டு வரப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug smuggling worth Rs 6.5 crore in Assam 5 arrested


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->