பிறந்தநாள் விழாவில் சோகம் - 1 1/2 வயது குழந்தையை தூக்கிச் சென்ற தெருநாய்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் காசர்கோடு அருகே உள்ள படணா பகுதியை சேர்ந்தவர்கள் சுலைமான்-ஃபபீனா தம்பதியினர். இவர்களுடைய ஒன்றரை வயது மகன் பஷீர். இவர்கள் மூன்று பேரும் உறவினர் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாளுக்காக அருகில் உள்ள வீட்டிற்கு நேற்று சென்றிருந்தனர். 

அனைவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பரபரப்பாக இருந்ததால், சிறுவன் பஷீர் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று சிறுவன் பஷீரை, விரட்டி விரட்டி கடித்து அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளது. 

அப்போது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விரட்டியடித்ததால், தெருநாய் சிறுவனை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளது. உடனே அவர்கள் சிறுவன் பஷீரை மீட்டு, உடனடியாக பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் ஒன்றரை வயது சிறுவனை தெரு நாய் கடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dog bite one and half years old boy in kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->