தலைநகரை வாட்டிவதைக்கும் பனிமூட்டம்: கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவு வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவில் பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

மேலும் ரயில் சேவை, விமான சேவைகளில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் அவதியடைகின்றனர். கடும் பனி இருப்பதால் அதிக அளவில் குளிர் ஏற்படுகிறது. இதனால் டெல்லி மக்கள் சாலைகளில் தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் டெல்லியில் நிலவும் தொடர் குளிர் கால நிலை காரணமாக மழலையர் பள்ளிகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை என கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi schools holidays till 12th


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->