டெல்லி : மருத்துவமனை ஐ.சி.யூ வார்டில் தீ விபத்து.. நோயாளி ஒருவர் உயிரிழப்பு.!
Delhi hospital fire accident
டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐசியு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெல்லியின் ரோகினி பகுதியில் பிரம்ம சக்தி என்ற மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ஐசியு பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மருத்துவமனையில் ஐசியு வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தீ அடுத்தடுத்து பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்புத் துறையின் இயக்குனர் தெரிவிக்கையில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழுந்திருக்கக் கூடும் என்றும் மற்ற அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
English Summary
Delhi hospital fire accident