ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை: மீட்புப் பணி தீவிரம்!
Delhi child fell into borehole
டெல்லி, கேஷப்பூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கேஷப்பூர் மண்டி பகுதியில் டெல்லி ஜல் போர்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 40 - 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறுக்குள் குழந்தை தவறி விழுந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது, ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த இடத்திற்கு இணையாக மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டு மீட்பு பணி தீவிரமடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Delhi child fell into borehole