பி.சி.சி.ஐ. தலையில் துண்டை போட்ட கொச்சி ஐ.பி.எல் அணி: ரூ.538 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!
Court orders BCCI to pay Rs 538 crore compensation to Kochi IPL team
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து கொச்சி அணி வெளியேற்றப்பட்ட விவகார வழக்கில் ரூ.538 கோடியை இழப்பீடாக வழங்க பி.சி.சி.ஐ.,க்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து கொச்சி அணியை பி.சி.சி.ஐ., நீக்கம் செய்தது. அதாவது, உரிய வங்கி உத்தரவாதத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்காத காரணத்தினால் கொச்சி அணி நீக்கம் நடவடிக்கை எடுத்ததாக பி.சி.சி.ஐ., விளக்கமும் அளித்திருந்தது. ஆனால், மைதான அனுமதி உள்ளிட்ட விவகாரத்தினால் மட்டுமே தாமதம் ஏற்பட்டதாக கொச்சி அணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, பி.சி.சி.ஐ.,யின் குறித்த நடவடிக்கையை எதிர்த்து கொச்சி அணி வழக்கு தொடர்ந்தது. குறித்த வழக்கில் 2015-ஆம் ஆண்டு தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதில், கொச்சி அணிக்கு ரூ.384 கோடியும். ரென்டோவஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுக்கு ரூ.154 கோடியும் என மொத்தம் ரூ.538 கோடியை செலுத்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பி.சி.சி.ஐ., மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதி சாக்லா, பி.சி.சி.ஐ.,யின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளதுடன், கொச்சி அணிக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் மேல்முறையீடு செய்ய பி.சி.சி.ஐ.,க்கு 06 வார காலம் அவகாசம் வழங்கியும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Court orders BCCI to pay Rs 538 crore compensation to Kochi IPL team