இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 58 பேர் கொரானாவுக்கு பலியாகியுள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 59,210 ஆக உள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 58  பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,932 ஆக உள்ளது. இதன் விகிதம் 1.19 சதவீதம் ஆகும்.

கொரோனாவிலிருந்து மேலும் 9,685 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,55,365 போ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை 212.75 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 22,40,162 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona update 2 sep 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->