ஒமைக்ரான் வைரஸால் இந்தியாவில் பிப்ரவரிக்குள் 3-வது அலை.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் 3-வது அலை அக்டோபருக்குள் தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்தனர். ஆனால்,  3-வது அலை தாக்கவில்லை. 

இதனிடையே வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3-வது மூன்றாவது அலை உச்சத்தை எட்டும் என கொரோனா கணிப்பு வியூக  நிபுணரும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த கணிப்பின்படி தற்போதைய புதிய வைரஸ் உடன் வருகின்ற பிப்ரவரிக்குள் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும்.

அப்போது நாட்டில் தினமும் கொரோனா தொற்றால் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் வரை பாதிக்கப் படலாம். ஆனால் இது இரண்டாவது அலையை விட மிதமானதாகவே இருக்கும். புதிய மாறுபாடு அதிகம் பரவும் தன்மை கொண்டது போல் தெரிகிறது. ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை. 

இந்நிலையில், தென்னாபிரிக்காவின் ஒமைக்ரான் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது வரை இந்த தொற்று தென் ஆப்பிரிக்கா மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவில்லை. ஆனால், அங்கு தொற்று பரவாது மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் நமக்கு தெளிவான பிம்பத்தை தருகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona 2rd wave in india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->