ஜார்கண்ட்டில் காங்கிரஸ் நிர்வாகி சுட்டு கொலை.!
congrass leader rajkishore died in jarkhant
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்ஹர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருப்பவர் மம்தா தேவி. இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதன் காரணமாக, மம்தா தேவியின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டு ராம்ஹர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து, ராம்ஹர் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மம்தா தேவியின் கணவர் பஜ்ரங் மொடோ வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ராம்ஹர் மாவட்டத்தில் உள்ள பட்ரது நகர காங்கிரஸ் நிர்வாகி ராஜ்கிஷோர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர், ராம்ஹர் மாவட்டத்தின் பர்கஹான் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அம்ப பிரசாதின் நெருங்கிய நண்பராவார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காங்கிரஸ் தலைவரை கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
congrass leader rajkishore died in jarkhant