6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் வாணி(23) விஸ்வேஷ்வரபுரா கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென வாணி அப்பகுதியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வி.வி.புரம் காவல் துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கல்லூரி நிர்வாகம் மாணவி கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College student commits suicide after jumping 6th floor in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->