ஆசிரியர்களின் நடவடிக்கையால் மனம் நொந்துபோன 09 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
Class 9 student commits suicide due to teachers actions in Kerala
பள்ளி நிர்வாகம் மாணவி ஒருவரை தனிமை படுத்தி வைத்ததால் மனா உளைச்சலுக்கு ஆளான 09-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஆசிர் நந்தா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 09-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். குறித்த மாணவி தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதனால் மனைவிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக பள்ளி நிர்வாகம் அவரை தனிமைப்படுத்தி வேறு வகுப்பில் அமர வைத்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி கடுமையாக மனா உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் பள்ளி முடிந்து நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்த சிறுமி ஆசிர் நந்தா வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டுக்கு வந்த பெற்றோம் மகள் அந்த நிலையில் பார்த்து கதறியுள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் விரைந்து வவந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Class 9 student commits suicide due to teachers actions in Kerala