திடீரென தடம் புரண்ட விரைவு ரயில் - பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் அருகே நம்பள்ளி ரயில்நிலையத்தில் வந்து கொண்டிருந்த சார்மினார் விரைவு ரெயில் இன்று காலை திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால், பயணிகள் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் காயமடைந்த பயணிகளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரெயில் விபத்து காரணமாக அங்கே ரெயில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

charminar train derail near hydrabad


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->