தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு..! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முதல் அமைச்சராகவும், சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்து வருகிறார். இந்த தெலுங்கு தேசம் கட்சி 1982-ஆம் ஆண்டு என்.டி.ராமராவால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 1995-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு தேசம் கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு தற்போது வரை செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு கடப்பா மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, அடுத்த 02 ஆண்டுகளுக்கு கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chandrababu Naidu has been re elected as the president of the Telugu Desam Party


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->