ரூ.1 லட்சம் திருமண உதவித்தொகை - சந்திரபாபு நாயுடு உறுதி.!
Chandrababu Naidu announces marriage allowance
ஆந்திரா, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்ற ரம்ஜான் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
அப்போது அவர், கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது இரண்டாவது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல ஹஜ் யாத்திரிகர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது
தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ஒரு லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் 4000 உதவித்தொகை வழங்கப்படும்.
சொந்த தொழில் செய்ய ஐந்து ஆண்டுகளில் ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chandrababu Naidu announces marriage allowance