22 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இந்திய திட்டம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு..!  - Seithipunal
Seithipunal


நேற்று இந்திய பொதுவிவகார மன்றத்தின் 9-வது வருடாந்திர கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார்.

அந்தக் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, சுகாதார துறையில் எழும் எந்தவொரு அச்சுறுத்தலையும் புதிய இந்தியா சந்திக்க தயாராக இருக்கிறது. ஆரோக்கியமான இந்தியாதான் நல்ல வளமான இந்தியாவாக இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உருவான புதிய இந்தியா, வல்லமை மிக்க நாடக வளர்ச்சியடைந்துள்ளது. எந்த நெருக்கடியையும் சந்திக்க புதிய இந்தியா நல்ல முறையில் தயாராக உள்ளது. 

இந்தியா அளவில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நுழைவதற்குள்ளேயே அதைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியை இந்திய அரசு தொடங்கிவிட்டது. அதற்கேற்றவாறு திட்டமிட்டுள்ளது. 

இந்தியா அந்த தொற்று நோயை சந்திக்க தயாரானது. நாட்டில் சுகாதார மாடல்களை திட்டமிடவும், கட்டமைக்கவும் முழுமையான அணுகுமுறையை இந்திய அரசு பின்பற்றி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central health minister speech in delhi annual forum meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->