மக்களே உசார்: ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களை வாங்க நிதி திரட்டுவதாக புதிய ஸ்கேம்: மத்திய அரசு எச்சரிக்கை..!
Central government warns of new scam to raise funds to buy modern weapons for the army
நாட்டில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மோசடியாளர்கள் புதிய புதிய யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றிவருவதோடு, அவர்களின் பணத்தையும் திருடுகின்றனர். பிரபலங்கள் பெயரில் போலிக்கணக்கை தொடங்கி சமூக வலைத்தளங்கள் வாயிலாக பணம் கேட்பதுபோன்ற மோசடி வேலைகளை செய்கின்றனர்.
இந்நிலையில், வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய செயலிகளில் இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான நிதியம் என்ற பெயரில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களை வாங்க வேண்டும் அதற்கு அரசு நிதி திரட்டுவதாக தகவல் பரவியுள்ளது.

அதாவது, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காகவும் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்காக மற்றும் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காகவும் பிரத்தியேக நிதியம் உருவாக்கப்பட்ட்டுள்ளதாகவும், அதற்கென தனிப்பட்ட வங்கி கணக்கு உருவாக்கப்பட்டிருப்பதாக என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த செய்தியில் வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ஒவ்வொரு இந்தியரும் தங்களால் இயன்ற தொகையை குறித்த கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும்,விரும்பினால் எல்லாவலு தொகை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தொகையை அரசு பெற்று ராணுவத்தை நவீனப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு அலுவலகம் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காகவோ ஆயுதங்கள் வாங்க உதவி பெறுவதற்காகவோ அரசு எந்த ஒரு வங்கிக் கணக்கையும் உருவாக்கவில்லை எனவும், பொதுமக்கள் இவ்வாறான போலியான தகவல் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இதுபோன்ற போலியான தகவல்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய வங்கி கணக்குகளுக்கு ஒருபோதும் பணத்தை அனுப்பக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, எந்த ஒரு தகவலையும் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னரே மற்றவருக்கு பகிர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
English Summary
Central government warns of new scam to raise funds to buy modern weapons for the army