கோவிஷீல்ட் தடுப்பூசியால்.. கிளம்பிய அடுத்த பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்கள் குறைதல் பாதிப்பு ஏற்படலாம் என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக நாடு முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட சும்மா 170 கோடிக்கும் மேற்பட்டோர் அச்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case filed in sc regards covidshield vaccine


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->