கர்நாடகா: கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.! 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கர்நாடகா பீதர் மாவட்டம் பங்கூர் அருகே, நேற்று கார் மற்றும் எதிரே வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் முழுவதும் சேதமடைந்த நிலையில், காரின் இடுப்பாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் உயிரிழந்த 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கமலபுராவில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car lorry accident in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->