பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்.! சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப் வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செ க்டரில் உள்ள ஷாஜதா கிராமத்திற்கு அருகே வழக்கமான கண்காணிப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அதிகாலை 2.11 மணியளவில், பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியுள்ளது. இதை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை நடத்திய தேடுதல் வேட்டையில், கருப்பு நிற ட்ரோன் சேதமடைந்த நிலையில், கிராமத்தின் அருகே உள்ள துஸ்ஸி பந்த் அருகே கைப்பற்றினர். மேலும் இந்த ஆளில்லா விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், ஆளில்லா விமானம் ஏதேனும் கடத்தல் பொருட்களை இறக்கிவிட்டதா என்பதை அறிய அப்பகுதியில் முழுவதும் சோதனை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BSF shot down Pakistan drone in Punjab Amritsar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->