அதிர்ச்சி.. டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் பள்ளியில் இருந்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "டி.பி.எஸ்., ஆர்.கே. புரத்தில் இருந்து காலை 7.06 மணிக்கும், ஜி.டி. கோயங்கா, பஸ்சிம் விஹார் பகுதியில் இருந்து காலை 6.15 மணிக்கும் வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்தன. 

இதையடுத்து தீயணைப்பு துறையினர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், உள்ளூர் போலீசார் உள்ளிட்டோர் பள்ளிக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே டெல்லியில் மேலும் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மதர் மேரிஸ், பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bomb threat to schools in delhi


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->