புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு 06-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை..!
Bomb threat to Puducherry Governors House for the 6th time experts inspect
புதுச்சேரியில் ஆளுநர் மாளிகைக்கு 06-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதல்வர் அலுவலகம், வீடு, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அண்மையில் இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்,அவை அனைத்தும் வெறும் புரளி என சோதனையின் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், இன்று இ மெயில் மூலமாக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட்டுள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் உடனடியாக சோதனை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் ஆளுநர் மாளிகை வளாகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தீவிர சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்றும், விசாரணை முடிவில் அது வெறும் மிரட்டல் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல்-14 மற்றும் 22 தேதிகளிலும், மே 09, 13 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே 05 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று 06-வது முறையாக அதே போன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bomb threat to Puducherry Governors House for the 6th time experts inspect