இவர்களுக்கு  ஓட்டு போடுவது வாக்கை குப்பையில் வீசுவதற்கு சமம்: பா.ஜ.க தலைவர் காட்டம்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் பா.ஜ.க சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடைபெற்றது. அப்போது தெலுங்கானா பா.ஜ.க தலைவரும் மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி பேசி இருப்பதாவது, 

பி.ஆர்.எஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மக்களை ஏமாற்றுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிக்கு வாக்களித்தால் உங்கள் மதிப்பு மிக்க வாக்கு குப்பையில் வீசியதற்கு சமம். 

பா.ஜ.க., பி.ஆர்.எஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க 17 இடங்களில் வெற்றி பெறும். 

சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. பி.ஆர். எஸ் கட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் கடந்த தேர்தலில் மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP leader says congress vote waste


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->