குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் மோடி சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு?.. மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேட்டி.!!
Before election Modi promise Wash Out
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குபதிவு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,
காங்கிரஸ் என்ற கட்சி களத்தில் இல்லை என்று கூறும் மோடி, காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பது ஏன், பாஜகவுக்கு அதிக நம்பிக்கை நம்பிக்கை இருந்தால் எதற்காக ஊழல்வாதிகளை பாஜக கட்சியில் சேர்க்க வேண்டும். நரேந்திர மோடி கடந்த தேர்தலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 15 லட்சம் தருவதாக கூறினார். காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளில் பதிக்கி வைத்திருக்கும் கருத்துப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவேன் என்றார். கடந்த தேர்தலில் மோடிக்குரிய வாக்குறுதிகள் ஒன்றைக் கூட மோடி நிறைவேற்றவில்லை என பேசினார்.
English Summary
Before election Modi promise Wash Out