அயோத்தி ராமர் கோவிலில் கர்நாடக சிற்பி செதுக்கிய சிலை? பா.ஜ.க மூத்த தலைவர் பதிவு! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவைச் சேர்ந்த சிற்பி செதுக்கிய சிலையை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், மைசூருவை சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கிய ராமர் சிலை அயோத்தியில் நிறுவப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும், தான் செதுக்கிய சிலை அயோத்தியில் நிறுவப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் என்னிடம் தெரிவிக்கவில்லை என சிற்பி அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார். 

3 பேர் உருவாகிய ராமர் சிலைகள் பரிசளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் ஒன்று தான் செதுக்கியது என்றும் அருள் யோகராஜ் தெரிவித்துள்ளார். 

இந்த ராமர் சிலையை செதுக்குவதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகியதாகவும் அயோத்தி கோவிலில் நிறுவப்பட்டால் அது பெரும் மகிழ்ச்சி தரும் எனவும் சிற்பி தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya Ram Temple Carnatic Sculptor Statue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->