ஜார்க்கண்டில் ஒரு காட்டுயானையின் அட்டூழியத்தால் பறிபோன 23 அப்பாவி உயிர்கள்; தமிழ்நாட்டில் இருந்து 06 கும்கிகளை வரவழைக்க முடிவு..!
After 23 people were killed by a wild elephant in Jharkhand it was decided to bring in Kumkis from Tamil Nadu
ஜார்க்கண்டி மாநிலம் வனப்பிரதேசம் அதிகம் நிறைந்தது. இதன் காரணமாக அங்கு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளன, அம்மாநிலத்தில்,மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ஒரு முரட்டு காட்டுயானை தாக்கியதில்கடந்த 02 வாரங்களில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நேற்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ராமேஸ்வர் ஓரான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது, யானைகளின் அச்சுறுத்தலை சமாளிக்க அரசு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும், யானை மற்றும் மனித மோதலைக் குறைக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், காட்டு யானையால் ஏற்படும் உயிரிழப்புக்கு ரூ.04 லட்சம் வழங்கப்படுகிறது. இதை, ஒடிசா போன்று ரூ.06 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது:
ஜார்க்கண்டில் யானை - மனித மோதல் கடுமையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும், யானை நடத்தையில் ஏற்படும் மாற்றத்துக்கு சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அரசு முழு பிரச்சினையையும் கவனித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாநிலத்தில் காட்டு யானையை கட்டுப்படுத்தும் அளவில், பயிற்சி பெற்ற மீட்புக் குழு தற்போது இல்லை என்றும், இந்தக் குறை விரைவில் தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளார். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து 06 கும்கி யானைகள் அழைத்து வர உள்ளதாகவும், இவை முரட்டு காட்டு யானைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் பதிலளித்துள்ளார்.
English Summary
After 23 people were killed by a wild elephant in Jharkhand it was decided to bring in Kumkis from Tamil Nadu