பழி தீர்த்துவிட்டதாக கூறி அண்ணியின் தலையை வெட்டி எடுத்து தெருவில் நடந்து சென்ற நபர்! - Seithipunal
Seithipunal


குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட தகராறு இவ்வாறு கொடூரமான கொலையில் சென்று முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மேற்கு வங்காள மாநிலம் ,பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசந்தி பகுதியை சேர்ந்தவர்  பிமல் மொண்டல்,இவருக்கும் இவரது  அண்ணனின் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்ப தகராறு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.  அண்ணனின் மனைவி சதி மொண்டலை கொலை செய்யப்போவதாக பிமல் மொண்டல் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்து வந்தநிலையில் சம்பவத்தன்று பிமல் அரிவாளால்  சதியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு தெருத்தெருவாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவன் செல்லும்போது, நீண்ட வருடங்களாக தனக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிக்கு பழி தீர்த்துவிட்டதாக கூறிக்கொண்டே அவர் சென்றுள்ளார். தனது அண்ணியின் தலையை வெட்டி எடுத்து பிமல் நடந்து சென்றதைப் பார்த்து அப்பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட தகராறு இவ்வாறு கொடூரமான கொலையில் சென்று முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.

கொலையை செய்துவிட்டு தெருவில் அண்ணியின் தலையோடு நடந்து சென்ற பிமல், நேராக காவல் நிலையத்திற்கு சென்று போலீசிடம் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A person walked through the street with the head of the brother in law claiming to have avenged an injustice


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->