டெல்லி! அசோக் விகார் பகுதி அருகே விருந்தினர் மண்டபத்தில் தீ விபத்து.!
A fire broke out in a Delhi guest hall
டெல்லி அசோக் விகார் பகுதிக்கு அருகே உள்ள விருந்தினர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வடமேற்கு டெல்லியில் உள்ள அசோக் நகர் பகுதிக்கு அருகே அமைந்த விருந்தினர் மண்டபத்தில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் 10 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் சிக்கி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தீ விபத்து ஏற்பட்டபோது மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று டெல்லி தீயணைப்பு சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A fire broke out in a Delhi guest hall