வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 09 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில், மேக்நகர் பகுதியில் உள்ள சஞ்சேலி ரயில்வே கிராசிங் அருகே, இன்று அதிகாலை 02:30 மணியளவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 09 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி, திருமண விழாவிற்கு சென்று சிவ்கர், தேவ்கர் கிராமங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேனின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த, 04 குழந்தைகள், 03 பெண்கள் மற்றும் 02 ஆண்கள் 11 பேரில் 09 பேர் உயிரிழந்தனர். மற்றும் இருவர் படுகாயமடைந்து தாண்டலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடம் தற்காலிக மற்றும் குறுகிய பாதையாக இருந்ததால், லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேனின் மீது விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல் கண்காணிப்பாளர் பத்மவிலோசன் ஷுக்லா உறுதிப்படுத்தியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

9 members of the same family killed in head on collision between van and lorry


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->