முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக மீட்பு.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


டெல்லியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பகுதியை சேர்ந்த தம்பதியின் 8வயது மகள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த சிறுமி காணாமல் போனதாக காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர். இந்நிலையில், யமுனை ஆற்றங்கரையில் சிறுமியின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தடு.

அங்கு சென்று பார்த்த போது அது காணாமல் போன சிறுமியின் உடல் என கண்டறிந்தனர். தடவியல் துறையினர் அந்த சிறுமியின் உடலை ஆய்வு செய்தனர். கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுமியின் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

அதன்பின்னர், கூரான ஆயுத்தால் முகத்தை தாக்கி சிதைத்தது தெரியவந்தது. மேலும், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பகுதியை சேர்ந்த ரவுடியான கசாப்புகடை வைத்திருந்த நபரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் சிறுமியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 years old Girl brutally murder


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->