சிகிரெட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு.. சிறுவன் கொடூர கொலை.. 17 வயது சிறுவன் கைது..!
!7 Old Boy arrested Due to killing A boy
சிகிரெட் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையில் 17 வயது சிறுவனை நண்பணே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் ரோகினியின் செக்டார் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே நின்று சிகிரெட் பிடித்து கொண்டிருந்தான்.
இதனை கண்ட அந்த இருந்த 17 வது நிரம்பிய மற்றோரு சிறுவன் இங்கெல்லாம் சிகரெட் புகைக்க கூடாது என கூறியுள்ளான். மேலும், வேறு எங்காவது சென்று சிகிரெட் பிடிக்கவும் கூறியுள்ளான்.
இதற்கு அந்த சிறுவன் மறுக்கவே இருவருக்கு இடையில் வாக்குவாத ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே வீட்டின் உரிமையாளரான சிறுவனை மற்றொருவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.
மேலும், அவனின் உடலை பையில் கட்டி சாலையோரத்தில் தூக்கி வீசி சென்றுள்ளான். அந்த பையை கண்டறிந்த காவல்துறையினர் அடையாளம் தெரியாமல் கிடந்த சிறுவனை யார் கொலை செய்தது என தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிகிரெட் பிரச்சனையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுவனை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
!7 Old Boy arrested Due to killing A boy