புனேவில் இன்று முதல் 5 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை.. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புனேவில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 5 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புனே நிர்வாகம் மதுபானம் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.

 விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க புனே மாவட்டத்தில் ஆகஸ்ட் 31 (புதன்கிழமை), செப்டம்பர் 4, 6, 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய 5 நாட்களுக்கு மதுக்கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 days wineshop closed in pune


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->