கொலீஜியம் நியமித்த 3 நீதிபதிகள்...! மத்திய அரசுக்கு பரிந்துரை! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுக்கு 3 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க  கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதில் நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த்,ஜே.கே. மகேஸ்வரி, விக்ரம் நாத் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய  கொலிஜியம் கூடியது.

இந்த கூட்டத்தின் முடிவில் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. அஞ்சாரியாமற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது.

மேலும், 5 புதிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கவும், 22 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 judges appointed by collegium Recommendation central government


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->