#BREAKING: பங்கு சந்தை கடும் சரிவு.. சோகத்தில் முதலீட்டாளர்கள்.!
24 SEP 2020 SENSEX HEAVY LOSS
உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்தால், உலக நாடுகளின் பொருளாதாரம் வரலாறுகளில் இல்லாத அளவிற்கு தொடர் வீழ்ச்சியை சந்தித்தது. முதலீட்டாளர்கள் பலரும் அடுத்தடுத்து பல இழப்புகளை சந்தித்தனர். பின்னாளில் இது மெல்ல மெல்ல மாற துவங்கியது.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1114 குறைந்து, 36353 புள்ளிகளுடன் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 326 புலிகள் சரிந்து, 10805 புள்ளிகளுடன் நிறைவு பெற்றுள்ளது. இதனால் இன்றைய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பங்குசந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை சரிவு பெரும் அதிர்வலையை வரும் நாட்களில் ஏற்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை நிலவரம் நல்ல நிலையில் இருந்த சூழலில், இன்று அதிர்ச்சி தரும் வகையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
24 SEP 2020 SENSEX HEAVY LOSS