தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற 2 மர்ம நபர்கள்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பசவலிங்கப்பா பகுதியில் வசித்து வந்தவர் தச்சு தொழிலாளி சல்மான்(20). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை பழுது நீக்குவதற்காக ஹெக்டே நகரில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்றார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு பேர் திடீரென சல்மானை திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இவர்களிடையே தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த 2 பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக சல்மானை குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சல்மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சல்மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சல்மானை கொலை செய்தவர்கள் இரண்டு பேர் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Mysterious person who murder to worker with kinfe in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->