ஜம்மு காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை எடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த ​​​​பந்திபோராவின் மேல் பகுதியில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரும் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் இமாத் அமீன் சோபன் என்ற சிட்டா பாய் மற்றும் தாஹிர் அகமது பட் என்ற டைகர் என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் இவர்களிடமிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, சில தோட்டாக்கள், சீன கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 Lashkar e Taiba terrorists arrested in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->