திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!
19-year-old youth fainted and died after dancing at a wedding in Telungana
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தில் சித்தையா என்பவரின் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 19 வயது இளைஞரான முத்யம் என்பவர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முத்யம் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனையடுத்து உடனடியாக இளைஞரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 19 வயதான இளைஞர் திருமண நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
19-year-old youth fainted and died after dancing at a wedding in Telungana