தேர்தல் நேரத்தில் 144 தடை உத்தரவு.. மதுபான கடைகளுக்கு சீல்.. ஆட்சியர் அதிரடி.!!
144 prohibited in Puducherry from today to April20
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/Pondy Entry.jpg)
இதனால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மக்களவை பொது தேர்தலை ஒட்டி புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தலை உத்தரவானது ஏப்ரல் இருபதாம் தேதி வரை அமலில் இருக்கும் என புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளுக்கு கலால் துறையினர் சீல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
144 prohibited in Puducherry from today to April20