இளமையை தக்க வைக்கும் திரிபலா பொடியின் அற்புதமான நன்மைகள்.!
Benefits of thiripala powder
சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருந்துகளில் ஒன்று திரிபாலா பொடி. இயற்கையாக வாழும் தமிழ் மக்கள் என்றும் இந்த திரிபலா பொடியை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திரிபலா பொடி என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படுவது தான் திரிபலா பொடி.
இந்த திரிபலா பொடியை இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கொடுக்கிறது.
மேலும் திரிபலா பொடி சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்துகிறது. மேலும் வயிற்றுப்புண் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.
திரிபலா பொடி குடல் இறக்கத்தை சீராக்கி செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரித்து ரத்த சோகை சரியாக உதவுகிறது.
குறிப்பாக தினமும் திரிபலா பொடி கொஞ்சமா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.
English Summary
Benefits of thiripala powder