மன அழுத்ததால் தலைவலியா??..!! இந்த முத்திரை நல்ல பலன் தரும்..!!
Arthana Chain Mudra
சில நேரங்களில் மனகுழப்பம் சோர்வு போன்றவை ஏற்படும் அந்த நேரங்களில் ஏற்படும் தலைவலியை தீர்க்க சின் முத்திரை உதவும்.
தலைவலி ஏற்பட ஆயிரம் காரணங்கள் உள்ளது. குறிப்பாக மன அழுத்தம் காரணமாக தலைவலி ஏற்படும். அப்போது சின் முத்திரை செய்யும் போது அந்த தலைவலி சரி செய்யும். அந்த முத்திரையை எப்படி செய்யலாம் என பார்போம்.
ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
இந்த முத்திரையை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும். அதிக சிந்தனை கட்டுப்பட, மனக்குழப்பம் நீங்க, மூளை சோர்வடைதலை தடுக்க, சுறுசுறுப்பு கிடைக்க, தலைவலி தீர இந்த முத்திரை உதவும்.