தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு நடக்கிறது? யார் பங்கேற்கலாம்? முழு விவரம் இதோ..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நாளை காலை 9 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

நடைபெறும் இடம்: கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு முடித்தவர்கள் வரை.

• இந்த முகாமில், ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

• மேலும் தனியார் வேலை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow Private sector employment camp in Tiruvannamalai kilpennathur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->