தமிழகத்தில் இன்றுடன் பள்ளி பொதுத் தேர்வுகள் நிறைவு.!!
school public exam today end in tamilnadu
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே 10 மற்றும்12ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு பொதுத்தேர்வு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த 13 ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைவதால், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.கோடை விடுமுறை முடிந்து ஜூலை 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பள்ளி பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. ஏற்கனவே 12, 10ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், இன்றுடன்11ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைகிறது.
English Summary
school public exam today end in tamilnadu