பொதுத்தேர்வு வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள்..தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு.!
Public exam rules and regulations
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத உள்ளனர்.
இதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பணிகள் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று அனைத்து அதிகாரிகளும் இறுதி கட்ட பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுத்தேர்வு வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,
பொதுத்தேர்வு எழுதும் மையத்திற்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்து வர தடை.
பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் சம்பந்தப்பட்ட மாணவர் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
அதேபோல் முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை போனால் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
English Summary
Public exam rules and regulations